12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… துணைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்லாம்!

 

12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… துணைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்லாம்!

மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை கடந்த 19ஆம் தேதி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டது. மாணவர்கள் நேற்று தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… துணைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்லாம்!

மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி, அதற்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. 12 வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு எழுத விரும்புவோர் இன்று முதல் 27ஆம் தேதி வரை தேர்வுத் துறை உதவி இயக்குனரகங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. ஏற்கனவே விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது

தனித்தேர்வர்களுடன் சேர்த்து மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படவுள்ள நிலையில் இன்று முதல் மறுதேர்வுக்கான விண்ணப்பங்கள் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.