பள்ளிக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர் : மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 

பள்ளிக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர் : மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர் அருகே பள்ளிக்கு சொல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் அருகே இருக்கும் மங்காபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் குருவையா. இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். இளைய மகன் பரமகுரு. இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பல மாதங்களாக வீட்டிலேயே இருந்த பரமகுருவுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்ததாக கூறப்படுகிறது.

பள்ளிக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர் : மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால், பள்ளிக்கு செல்லுமாறு பரமகுருவின் பெற்றோர் அவரை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பெற்றோர் பேச்சைக் கேட்காத பரமகுரு பள்ளிக்கு செல்லாமலேயே நண்பர்கள் சிலருடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்துள்ளார். கடுப்பான பெற்றோர், அவரை திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரமகுரு, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், அவரது சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.