கொரோனா 2.0 எதிரொலி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

 

கொரோனா 2.0 எதிரொலி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டன. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இதே நடைமுறையே இந்த ஆண்டும் கடைபிடிக்கப்பட்டது.

கொரோனா 2.0 எதிரொலி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான ( 2020-2021 ) 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து தமிழக அரசு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும். சுகாதாரத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.