கொரோனா தொற்றுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு!

 

கொரோனா தொற்றுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு!

கொரோனா தொற்று அதிகரித்து நிலையில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் தேர்வை ரத்து செய்யவேண்டும், விடுமுறை அளிக்க வேண்டுமென ஆசிரியர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு!

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

முகக்கவசம் சமூக இடைவேளி கட்டாயம்.

மாணவர்கள் கிருமிநாசினி சானிட்டைசர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துகொள்ளவேண்டும்.

சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்துதல் கூடாது.

நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளது.