12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடு

 

12 ஆயிரம் பேருக்கு  வேலைவாய்ப்பு; அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடு

12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

12 ஆயிரம் பேருக்கு  வேலைவாய்ப்பு; அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடு

கொரோனா கொடுங்காலத்தினால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. படித்த இளைஞர்கள் பலரும் வேலை இன்று தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் கலங்கரை விளக்கம் மாதிரி ஒரு காரியத்தை செய்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

150 தனியார் நிறுவனங்களை ஒன்றுசேர்த்து அந்த நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்துகொள்வதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறவும் வசதியாக, சென்னையில் வரும் 27.2.2021 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்.

சென்னை ராயபுரத்தில் ரயில்வே நிலையம் அருகே மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள தூய பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.

காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் நடக்கும் இந்த முகாமில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்வதற்கான ஆலோசனை மற்றும் இலவச செய்தி திறன் பயிற்சிக்கான ஆலோசனை , பேங்க், ரயில்வே போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகான சேர்க்கையும் நடைபெறுகிறது.