12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை – கேட்ச் பிடித்த டெலிவரி பாய்

 

12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை – கேட்ச் பிடித்த டெலிவரி பாய்

12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 2வயது குழந்தையை யதேச்சையாக அப்பக்கம் வந்த டெலிவலரி பாய் கேட்ச் பிடித்துவிட்டார். ஆனாலும், சிறுமியின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. 168 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் குழந்தையின் இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்திருக்கிறது. வாயில் ரத்தம் வந்ததுமே உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்தபோது அங்கு நடந்த பரிசோதனையில் எலும்பு இடம்பெயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை – கேட்ச் பிடித்த டெலிவரி பாய்

குழந்தையின் மாடியின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு அழுததை பார்த்ததும், குழந்தை கீழே விழுந்தால் எந்த இடத்தில் விழும் என்பதை உடனே கணக்கிட்டு அந்த கூரையின் மீது ஏறி நின்றுகொண்டார் இன்குயன் என்காக் மான்ம் என்கிற 31 வயது இளைஞர். அவர் நினைத்தது மாதிரியே குழந்தை கத்திக்கொண்டே விழுந்ததும் அவர் திட்டமிட்டபடியே கேட்ச் பிடித்துவிட்டார்.

12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை – கேட்ச் பிடித்த டெலிவரி பாய்

கீழே விழும் குழுந்தையை என் மகள் போல நினைத்துக்கொண்டேன். அதனால்தான் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தேன் என்று தெரிவிக்கிறார் அந்த இளைஞர்.

வியட்னாமில் உள்ள அப்பார்ட்மெண்டில் நடந்த இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, அக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.