சட்டவிரோதமாக மது விற்ற 123 பேர் கைது; 1,882 மதுபாட்டில்கள் பறிமுதல்

 

சட்டவிரோதமாக மது விற்ற 123 பேர் கைது; 1,882 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 123 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயிரத்து 882 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேவர் குருபூஜை விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக மது விற்ற 123 பேர் கைது; 1,882 மதுபாட்டில்கள் பறிமுதல்

இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சட்ட விரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில், ஏ.வி.பட்டி ரோடு அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்யப்பட்ட 519 மதுபான பாட்டில்களை வடமதுரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 123 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 882 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மது விற்ற 123 பேர் கைது; 1,882 மதுபாட்டில்கள் பறிமுதல்