1,200 வாரமாக திரையில் வெற்றிநடை போடும் பாலிவுட் காதல் காவியம்!
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், நடிகை கஜோல் ஜோடி சேர்ந்து நடித்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் 1,200 வாரங்களாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மும்பை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், நடிகை கஜோல் ஜோடி சேர்ந்து நடித்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் 1,200 வாரங்களாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்திய சினிமாவை பொருத்தவரை அதிக வசூலை ஈட்டும் படங்களுக்கு வெள்ளி விழா, பொன் விழா போன்ற வெற்றி விழாக்கள் கொண்டாடப்படும். ஆனால், தற்போது வாரத்துக்கு கிட்டதட்ட 3-5 திரைப்படங்கள் ரிலீசாவதால், வர படங்கல் 10 நாட்கள் ஓடினாலே சூப்பர் ஹிட், ப்ளாக் பஸ்டர் என கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்படும் காலத்தால் அழியாத காதல் காவியமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் 1,200வது வாரத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது.
மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் தினமும் மதிய காட்சிக்கு ரூ.15 லிருந்து 20 வரை டிக்கெட் விலை வசூலிக்கப்படுகிறது. வார இறுதியில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடுகிறது. எவர்க்ரீன் காதல் கதையின் நாயகர்களான ராஜ்-சிம்ரன் 23 ஆண்டுகால் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
A special journey that began 23 years ago, goes on even today. Your love has kept Raj & Simran’s story alive on the big screen for 1200 weeks non-stop. Thank u for falling in love with us so unconditionally for so many years! #23YearsOfDDLJ
— Shah Rukh Khan (@iamsrk) October 23, 2018
இது குறித்து நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பதிவில், ’23 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ஸ்பெஷல் பயணம் இது. இன்னும் தொடர்கிறது. 23 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் ராஜ்-சிம்ரன் உயிர்ப்பிக்க ரசிகர்களின் அன்பு தான் காரணம். இத்தனை ஆண்டுகளாக தீராக் காதலை பொழியும் ரசிகர்களுக்கு நன்றி’ என ட்வீட்டியுள்ளார்.
1200 weeks and still running! thank you all for all the love that you have been showering on #DDLJ for so many years! It was, it is and will always be an incredibly special film for all of us. @iamsrk @yrf #AdityaChopra
— Kajol (@KajolAtUN) October 20, 2018
இதேபோல் சிம்ரனாக நடித்த கஜோல், ‘1200 வாரம், இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. 23 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது எங்கள் மனதிற்கு மிக நெருக்கமான படம்’ என குறிப்பிட்டுள்ளார்.