பிரிண்டிங் நிறுவன அதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள், ரூ.28 லட்சம் கொள்ளை!

 

பிரிண்டிங் நிறுவன அதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள், ரூ.28 லட்சம் கொள்ளை!

திருப்பூர்

திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகைகள் மற்றும் ரூ.28 லட்சம் பணம் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருப்பூர் – தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சபியுல்லா (54). இவர் அதே பகுதியில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக் கிழமை அன்று சபியுல்லா, தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை கண்டு, அவரது உறவினர்கள் சபியுல்லாவுக்கு தகவல் அளித்தனர்.

பிரிண்டிங் நிறுவன அதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள், ரூ.28 லட்சம் கொள்ளை!

அதன் பேரில், சபியுல்லா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் 28 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. எனினும், மற்றொரு அறையில் இருந்த 19 லட்சம் ரூபாய் பணம் பத்திரமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வர வழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.