இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழப்பு

 

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழப்பு

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே இருச்சக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கிருஷ்ணன். இவரது மகள் மோகனபிரியா(12). இவர் சஞ்சிவி நகரில உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி மாலை ஜீவாநகர் பகுதியில் சாலையில் நடந்துசென்ற சிறுமி மீது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது.

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழப்பு

இதில் படுகாயம் அடைந்த சிறுமியை அந்த பகுதிமக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக நேற்று மதியம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.