சென்னையில் கருப்பு பூஞ்சை நோயால் 12 வயது சிறுமி பாதிப்பு!

 

சென்னையில் கருப்பு பூஞ்சை நோயால் 12 வயது சிறுமி பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது கருப்பு பூஞ்சை நோய். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்திலும் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனையடுத்து கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கருப்பு பூஞ்சை நோயால் 12 வயது சிறுமி பாதிப்பு!

இந்நிலையில் மதுரையை தொடர்ந்து சென்னையிலும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கருப்பு பூஞ்சை நோயால் 12 வயது சிறுமி பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.