புத்தாண்டிற்கு தாய் பிரியாணி செய்ய மறுத்ததால் வேதனை… தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி…

 

புத்தாண்டிற்கு தாய் பிரியாணி செய்ய மறுத்ததால் வேதனை… தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி…

சென்னை

குன்றத்தூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தாய் பிரியாணி செய்து தர மறுத்ததால், 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குன்றத்தூர், கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் பழனி. இவருக்கு தேவி என்ற மனைவியும், தீபிகா(12) என்ற மகளும் உள்ளனர். தீபிகா, குன்றத்தூர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று பிரியாணி செய்து தரும்படி தீபிகா, தனது தாயாரிடம் கேட்டுள்ளார். புத்தாண்டு தினம் வெள்ளிக்கிழமை வருவதால் பிரியாணி செய்துதர முடியாது என்று தேவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

புத்தாண்டிற்கு தாய் பிரியாணி செய்ய மறுத்ததால் வேதனை… தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி…

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென தீபிகா தனது அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார். இந்த நிலையில் தேவி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, சிறுமி அறையில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், தீபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.