தடுத்த பெண் -தாக்கிய பையன் -பலாத்கார முயற்சியால் நடந்த சோகம்.

 

தடுத்த பெண் -தாக்கிய பையன் -பலாத்கார முயற்சியால் நடந்த சோகம்.

12 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற டீனேஜ் வாலிபரை போலீசார் கைது செய்தனர் .

தடுத்த பெண் -தாக்கிய பையன் -பலாத்கார முயற்சியால் நடந்த சோகம்.


உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மஜோலா காவல் நிலையத்தின் எல்லைக்குள் ஒரு
வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார் .இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதான டீனேஜ் பையன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் .அப்போது அந்தப்பெண் அதை தடுத்தபோது அந்த வாலிபர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினார் .இந்த தாக்குதலில் அந்த பெண் மயக்கமடைந்து விழுந்து விட்டார் .அதனால் அந்த வாலிபர் ஒரு பைக்கில் தப்பியோடி விட்டார் .இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராவில் பதிவானது .மேலும் அந்த வீடியோவும் சமூக ஊடகத்தில் வைரலானது .
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மொராதாபாத் மாவட்ட மருத்துவமனைக்கு அந்த காயமடைந்த சிறுமி கொண்டு செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை காரணமாக உயர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். பிறகு அந்த மைனர் வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்,தாக்குதல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது .
இதற்கிடையில், இந்த சம்பவத்தை அறிந்த உ.பி. சிறுவர் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் விஷேஷ் குமார் குப்தா மொராதாபாத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரினார் .