“குறுக்கு சந்துல கூட்டிப்போய் குதறிட்டிங்களே “-டீனேஜ் பெண்ணுக்கு ஆன் லைன் நட்பால் வந்த வினை

 

“குறுக்கு சந்துல கூட்டிப்போய் குதறிட்டிங்களே “-டீனேஜ் பெண்ணுக்கு ஆன் லைன் நட்பால் வந்த வினை

ஒரு 12 வயது பெண் ஆன்லைனில் ஏற்பட்ட தவறான நட்பால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் பல பெண்களுக்கு ஒரு பாடமாக அமையும் .

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் 12 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் விளையாட்டை விளையாடும் போது அவரோடு மூன்று வாலிபர்கள் அறிமுகமானார்கள் .பிறகு அந்த டீனேஜ் வாலிபர்கள் அந்த பெண்ணோடு நட்போடு பழகுவது போல நடித்தார்கள் .அவர்கள் நட்பாக பழகுவதாக நம்பிய அந்த பெண்ணும் அவர்களோடு அடிக்கடி ஆன்லைனில் அரட்டையடித்து வந்துள்ளார் .
பிறகு அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை ரம்பா நகருக்கு ஒரு இடத்தில் சந்திக்க வரச்சொன்னார்கள் ,அவர்களின் பேச்சை உண்மையென நம்பிய அந்த பெண் அவர்கள் சொன்ன இடத்திற்கு தனியே சென்றார் .அங்கு அந்த பெண்ணுக்காக காத்திருந்த அந்த டீனேஜ் வாலிபர்கள் அந்த பெண்ணை காரில் ஒரு குறுக்கு சந்திற்கு கடத்திக்கொண்டு போனார்கள் .அங்கு வைத்து மூன்று வாலிபர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்தார்கள் .பிறகு அந்த வீடியோவினை காமித்து , இந்த விஷயத்தை வெளியே சொன்னால் இதை சமூக ஊடகத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள் .
பிறகு அந்த விடீயோவினை காமித்து மிரட்டி, பலமுறை அவர்கள் சொல்லுமிடத்திற்கு அந்த பெண்ணை வரவைத்து அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளனர் .இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்தார்கள் .

“குறுக்கு சந்துல கூட்டிப்போய் குதறிட்டிங்களே “-டீனேஜ் பெண்ணுக்கு ஆன் லைன் நட்பால் வந்த வினை