“பாடம் சொல்லித்தறேன்னு பாடா படுத்திட்டிங்களே” சீனியர்களிடம் சிக்கிய ஜூனியர் மாணவி

 

“பாடம் சொல்லித்தறேன்னு பாடா படுத்திட்டிங்களே” சீனியர்களிடம் சிக்கிய ஜூனியர் மாணவி


ஒரு பள்ளியில் பத்தாம் க்ளாசில் படிக்கும் இரண்டு மாணவர்களிடம் அதே பள்ளியில் எட்டாம் க்ளாசில் படிக்கும் மாணவி சிக்கி சின்னாபின்னமான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“பாடம் சொல்லித்தறேன்னு பாடா படுத்திட்டிங்களே” சீனியர்களிடம் சிக்கிய ஜூனியர் மாணவி

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் ராகேஷ் மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பில் படித்து வருகிறார்கள் .அவர்களிருவரும் மிகவும் பணக்கார வீட்டு பிள்ளைகள் .இதனால் அவர்கள் வீட்டில் கொடுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் பாக்கெட் மணியை வைத்துக்கொண்டு உல்லாசமாக ஓர் சுற்றுவதும் ,கும்மாளமடிப்பதுமாக வாழ்ந்து வந்தனர் .இந்நிலையில் அவர்களின் வீட்டிற்கு அருகே அவர்களின் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியும் வசித்து வந்தார் .அந்த மாணவி அந்த இரண்டு சீனியர் மாணவர்களுக்கும் தோழியாக இருந்தார்
கடந்த புதன் கிழமையன்று ராகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு அந்த எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியை பாடம் சொல்லி தருவதாக கூறி ,தங்களின் பைக்கில் ஏற்றிக்கொண்டு அங்குள்ள அவர்களின் பண்ணை வீட்டிற்கு கூட்டி சென்றார்கள் .அங்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற அவர்கள் அவருக்கு பாடம் சொல்லி தராமல் பலாத்காரம் செய்தார்கள் .பிறகு இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி , அவரின் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டார்கள் .
வீட்டிற்கு வந்த அந்த மாணவி இந்த பலாத்கார விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கூறினார்கள் .அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டஅந்த இருவரும் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

“பாடம் சொல்லித்தறேன்னு பாடா படுத்திட்டிங்களே” சீனியர்களிடம் சிக்கிய ஜூனியர் மாணவி