தீக்காயங்கள், கரண்ட் ஷாக் என சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்… ஆலை முதலாளியின் அராஜகம் !

 

தீக்காயங்கள், கரண்ட் ஷாக் என சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்… ஆலை முதலாளியின் அராஜகம் !

நகை திருட்டு என்ற சந்தேகத்தின் பேரில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கொடூரமான தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது அதுமில்லாமல் சிறுவனின் குடும்பமும் ஒரு குழுவினரால் சுமார் 36 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனின் கண்கள், முகம், கைகால்கள் மற்றும் முதுகில்பல காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் சிறுவனின் உடல் முழுதும் தீக்காயங்களும் காணப்படுகின்றன.

தீக்காயங்கள், கரண்ட் ஷாக் என சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்… ஆலை முதலாளியின் அராஜகம் !

அப்ரார் சராய் என்பவர் குவாஜா என்ற பகுதியில் ஆர்.ஓ ஆலை ஒன்றை நடத்தி வருகிறார்,. பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது சகோதரனும் அங்கு வேலை செய்து வந்துள்ளனர் வெள்ளிக்கிழமை, அப்ரார் சிறுவனை தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் பூட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் சிறுவனின் மீது மின்சாரத்தை பாய்ச்சி துன்புறுத்தியுள்ளார். தீக்காயங்களையும் ஏற்படுத்தியுள்ளார். திருடப்பட்ட நகைகள் எங்குள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள இவ்வாறு துன்புறுத்தியதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சிறுவனைடீ தேடி அவனது பெற்றோர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பார்த்த போது சிறுவனை அடைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆலை ஓனரின் குடும்பம் சிறுவனின் குடும்பத்தையும் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களின் மூத்த மகன் அங்கிருந்து தப்பிச் சென்று உறவினர்களிடம் தெரிவிக்கவே, போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் ஆலை சொந்தக்காரரின் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.