“தினம் தூங்க விடாம தொல்லை பண்றியேடா ..” -பக்கத்து வீட்டு ஆண்ட்டியால் சிறுவனுக்கு நேர்ந்த நிலை.

 

“தினம் தூங்க விடாம தொல்லை பண்றியேடா ..” -பக்கத்து வீட்டு ஆண்ட்டியால் சிறுவனுக்கு நேர்ந்த நிலை.

தினமும் ஒரு சிறுவனின் சேட்டையால் தூக்கமிழந்த ஒரு ஆண்ட்டி அந்த சிறுவனை பலமாக தாக்கியதால் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளார்கள் .

“தினம் தூங்க விடாம தொல்லை பண்றியேடா ..” -பக்கத்து வீட்டு ஆண்ட்டியால் சிறுவனுக்கு நேர்ந்த நிலை.

கோவாவின் வாஸ்கோவைச் சேர்ந்த ஒரு 40 வயதான பெண் தினமும் மதிய நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்குவது வழக்கம் .அப்படி கடந்த ஜனவரி 18ம் தேதியன்று அவர் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண்னின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 12 வயதான சிறுவன் சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தான் .இதனால் அந்த பெண் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டார் .இவ்வாறு அந்த சிறுவன் அடிக்கடி செய்வதால் அந்த ஆண்ட்டி மிகவும் தூக்கமின்றி அவதிப்பட்டார் அதனால் அந்த பெண் அந்த சிறுவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்

மறுநாள் அந்த சிறுவன் சாலையில் சைக்கிளில்  சென்றபோது அந்த ஆண்ட்டி ஒரு கட்டையை எடுத்து அந்த சிறுவனை பலமாக உடம்பின் பல பாகங்களில் தாக்கினார் .இந்த  தாக்குதலில் அந்த சிறுவனுக்கு கழுத்து .முதுகு ,கை ,கால் என்று பல இடங்களில் காயம் ஏற்பட்டது .மேலும் இந்த தாக்குதலில் ரத்தம் வந்து சாலையிலே மயங்கி விழுந்தார் .

அதனால் அந்த சிறுவனுக்கு  அவரின் நண்பர்கள்  சிகிச்சையளித்து வீட்டில் கொண்டு போய் விட்டார்கள் .மேலும் இந்த தாக்குதல் காட்சியை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகத்திலும் வெளியிட்டார்கள் .அந்த காட்சியை ஊடகத்தில் பார்த்த பலர் இந்த சம்பவத்தை கண்டித்தார்கள் .பிறகு அன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவரின் தந்தை தனது மகன் தாக்கப்பட்டு ,காயம்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பெண் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு  சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை விசாரித்து வருகிறார்கள் .

“தினம் தூங்க விடாம தொல்லை பண்றியேடா ..” -பக்கத்து வீட்டு ஆண்ட்டியால் சிறுவனுக்கு நேர்ந்த நிலை.