12 to 3 பந்த் – காங்கிரஸ் முழு ஆதரவு

 

12 to 3 பந்த் – காங்கிரஸ் முழு ஆதரவு

டெல்லியில் 73 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் நாடு முழுவதிலும்

12 to 3 பந்த் – காங்கிரஸ் முழு ஆதரவு

புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின்னர் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடாதபடி டெல்லியில் எல்லைகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதனால், சிங்கு, காஜிபூர், திக்ரி ஆகிய டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தினை தொடர்கின்றனர்.

இந்நிலையில், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ இன்று நாடு முழுவதும் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மறியல் போராட்டத்தினை நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது. நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சியினரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

12 to 3 பந்த் – காங்கிரஸ் முழு ஆதரவு

இந்த போராட்டத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு அந்த வாகனங்களில் இருப்போருக்கு தண்ணீரும், உணவும் கொடுத்து போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நாடு தழுவிய இந்த 3 மணி நேர பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை தருவதாக அறிவித்திருக்கிறது.