சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 12 பேர் மரணம்!

 

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 12 பேர் மரணம்!

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த கொடிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. லட்சக் கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 12 பேர் மரணம்!

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலமும், தமிழகமும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டுமே 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேரும் கேஎம்சி மருத்துவமனையில் 2 பேரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.