நாட்டு குண்டு கொடுத்து, இறைச்சிக்காக நரியைக் கொன்ற நரிக்குறவர்கள் 12 பேர் கைது!

 

நாட்டு குண்டு கொடுத்து, இறைச்சிக்காக நரியைக் கொன்ற நரிக்குறவர்கள் 12 பேர் கைது!

திருச்சியில்,ஜீயபுரம் பகுதியில் பகுதியில் நரி ஒன்று வெடிமருந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அப்பகுதியில் வயல்களை சேதப்படுத்தும் வன உயிரினங்களை கண்காணிக்க வன அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அங்கு ஒரு கும்பல் இருந்துள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் வைத்திருந்த பையில் உயிரிழந்த நரியின் சடலம் இருப்பது தெரிய வந்தது. மேலும், அந்த நரி மட்டனில் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்டதும் அம்பலமாகியது.

நாட்டு குண்டு கொடுத்து, இறைச்சிக்காக நரியைக் கொன்ற நரிக்குறவர்கள் 12 பேர் கைது!

இது குறித்து பேசிய வனத்துறை அதிகாரி, 12 பேர் கொண்ட நரிக்குறவர் கும்பல், நரியை வேட்டையாட நாட்டு குண்டுகளை அதற்கு கொடுத்து கொன்றதாகவும் அவர்கள் டீக்கடையில் டீகுடித்து கொண்டிருக்கும் போது பிடிபட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து திருவரம்பூருக்கு அருகிலுள்ள புலங்குடி காலனியை சேர்ந்த அந்த 12 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு நாட்டு குண்டு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.