தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

 

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தஞ்சாவூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே ஐ.ஜி சுமித் சரண் ஊர்க்காவல்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. தினகரன் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி கயல்விழி, காவல் பயிற்சி பிரிவு டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக விஜயகுமார், திண்டுக்கல் எஸ்.பியாக ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை எஸ்.பியாக ரவுளிப்பிரியா, ராணிப்பேட்டை எஸ்.பியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். சைபர் கிரைம் பிரிவு- 2 எஸ்.பியாக ஓம்பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் பிரிவு- 3 எஸ்.பியாக தேவராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்.பியாக விக்ரமன், பரங்கிமலை துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையராக ஷியமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.