ஆபாச நடனம் – உல்லாசம்! கொளத்தூர் கிளப்பில் இருந்த 12 அழகிகள் கைது!

 

ஆபாச நடனம் – உல்லாசம்! கொளத்தூர் கிளப்பில் இருந்த 12 அழகிகள் கைது!

ஆபாச நடனம், ஸ்பா, உல்லாசம் என்று கிளப்பில் சட்டவிரோத செயல்களை செய்து வந்த 12 அழகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூரை அடுத்த ரெட்டைஏரி பகுதியில் இயங்கி வரும் தனியார் கிளப்பில் கடந்த சில வருடங்களாக அழகிகள் நடனம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஸ்பா மற்றும் விபச்சாரமும் நடந்து வந்திருக்கிறது. மதுபோதையில் அழகில் நடனமும், அது தொடர்பான கூத்துகளும் அப்பகுதியினர் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ராஜமங்கலம் போலீசாருக்கு பலமுறை கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்ததால், அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் ஜவகர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆபாச நடனம் – உல்லாசம்! கொளத்தூர் கிளப்பில் இருந்த 12 அழகிகள் கைது!

அவர் உடனே, சிறப்பு காவல்படையினரை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தார். தக்க நேரம் பார்த்து திடீரென கிளப்பில் போலீசார் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது, அழகிகள் நடனமும் மதுபோதையில் அதை ஒரு கூட்டம் ரசித்துக்கொண்டிருந்திருக்கிறது. இளைஞர்களும் இளம்பெண்களும் அரைகுறை ஆடையில் உற்சாக பானத்தில் மிதந்து ஆடியிருக்கிறார்கள். சில அறைகளில் ஸ்பா மற்றும் உல்லாச லீலைகள் நடத்தியிருக்கின்றனர்.

சட்டத்திற்கு புறம்பான அத்தனை வேலைகளும் அங்கே நடந்ததால், அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 12 அழகிகள் மீதும் வழக்குபதிவு செய்த ராஜமங்கலம் போலீசார், அவர்களை பெரவல்லூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இந்த கிளப் மேலாளர் பைசல் என்பவர் போலீசில் சிக்கியுள்ளார். கார்த்திகேயன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.