12 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை – சித்தப்பா மற்றும் சகோதரர்களே செய்த கொடூரம்

 

12 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை – சித்தப்பா மற்றும் சகோதரர்களே செய்த கொடூரம்

12 வயது சிறுமி தன் சொந்த சித்தப்பா மற்றும் சகோதரர்களாலேயே கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேசம் :

12 வயது சிறுமி தன் சொந்த சித்தப்பா மற்றும் சகோதரர்களாலேயே கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அதே நாளிலேயே அந்தச் சிறுமியை பிணமாக மீட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த போது பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்துள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் இருந்து திரும்பும் வழியில், அவர் சித்தப்பாவின் மகன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். சகோதரன் தானே என்று நம்பி அவர்  வீட்டுக்கு சென்ற சிறுமியை, சித்தப்பா மட்டும் சகோதரர்கள் இரண்டு பேர் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர். அதே கிராமத்தில் வசித்து வரும் அந்த குடும்பத்தினர் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் அவர்கள் தான் குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களது வீட்டில் இருந்து ரத்தக்கறை படிந்த சிறுமிகளின் துணிகள் மற்றும் கொலை செய்ய உபயோகித்த ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிறுமியின் சித்தப்பா மற்றும் ஒரு சகோதரனை கைது செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய மற்றொரு சகோதரனைத் தேடி வருகின்றனர். உயிரை உறைய வைக்கும் இந்தக் குற்ற சம்பவத்திற்கு சிறுமியின் சித்தியும் உடந்தை என்பது குறிப்பிடத்தக்கது,