12 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா குறித்து எழுதிய பெண் எழுத்தாளர்… திடீரென மறைந்து விடும் என்று தகவல்!

 

12 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா குறித்து எழுதிய பெண் எழுத்தாளர்… திடீரென மறைந்து விடும் என்று தகவல்!

பின்னர்  10 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்களை தாக்கி பின்னர் முற்றிலும் மறைந்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  தற்போது  கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். 

 


 

இந்நிலையில் 2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் வெளியிட்ட  ‘என்ட் ஆஃப் டேஸ்’ புத்தகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகுறித்து கூறப்பட்டுள்ளது.  

ttn

அந்த புத்தகத்தின் 312வது பக்கத்தில், ‘2020 ஆம் ஆண்டில் கடுமையான நிமோனியா போன்ற நோய் போன்று உருவாகி நுரையீரல் மற்றும் மூச்சுக்குமாய் குழாய்களைத் தாக்கும். உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தும் இந்த நோயை உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் கூட இதை கட்டுப்படுத்த முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த நோய் திடீரென்று மறைந்துவிடும், பின்னர்  10 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்களை தாக்கி பின்னர் முற்றிலும் மறைந்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

அந்த புத்தகத்தில் கொரோனா வைரஸ் என்று குறிப்பிட்டு பெயரை சொல்லாவிட்டாலும், 12 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து கணித்திருப்பது பெண் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் விரைவில் மறைந்துவிடும் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில் அது உண்மையில் நடந்தால் மக்கள் நிச்சயம் நிம்மதி அடைவார்கள். இந்த தகவலை 2008 ஆம் ஆண்டே எழுதிவைத்துள்ள எழுத்தாளர் சில்வியா பிரவுன் கடந்த 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.