12வது ஆண்டு திருமண நாள்: உலக அழகிக்கு அபிஷேக் பச்சன் கொடுத்த சர்ப்ரைஸ் இது தான்?
திருமண நாளை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யாராயின் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மும்பை: திருமண நாளை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யாராயின் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மிஸ் வேர்ல்டு என்று சொன்னால் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உடனடியாக நினைவிற்கு வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப்போட்டியில் பட்டம் வென்ற இவரைத் தொடர்ந்து பல்வேறு பெண்கள் மிஸ் வேர்ல்டு பட்டம் வென்றிருந்தாலும் இவரைப் போல் ரசிகர்கள் மத்தியில் யாரும் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை.
தனது நடிப்பு திறமையினாலும், அழகாலும் பாலிவுட்டை இன்னும் கூட தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பேரழகி ஐஸ்வர்யா ராய் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர். எனினும் இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
பொதுவாகவே ஐஸ்வர்யா ராய் திரைப்பட விழாக்கள் மற்றும் பார்டிகளுக்கு வரும் போது கவர்ச்சியான மாடர்ன் உடைகளில் வருவது வழக்கம். அப்போது தாமாக முன்வந்து புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் நிகழ்வுகளும் நடக்கும். ஆனால் இம்முறை ஐஸ்வர்யா ராயை புகைப்படம் எடுத்திருப்பது அவரது காதல் கணவர் அபிஷேக் பச்சன்.
சமீபத்தில் விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் இருவரும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிலா வெளிச்சத்தில் பேரழகி ரம்மியமாகக் காட்சியளிக்கிறார்.
மேலும் இன்றுடன் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த புகைப்படத்துடன் இன்னும் சில படங்களையும் காதல் மனைவியை குஷிப்படுத்த பதிவிட்டுள்ளார் அபிஷேக். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்க: கவுரவம் பார்க்காமல் மனைவிக்கு ஷூ லெஸ் கட்டிவிட்ட பிரபல நடிகையின் கணவர்: வைரலாகும் புகைப்படம்!