12ம் வகுப்பு மாணவனுடன் ஆபாச புகைப்படம், சாட்டிங் செய்த 40 வயது ஆசிரியை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

12ம் வகுப்பு மாணவனுடன் ஆபாச புகைப்படம், சாட்டிங் செய்த 40 வயது ஆசிரியை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

17 வயது மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் தருவதாகக்  கணினி ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:  17 வயது மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் தருவதாகக்  கணினி ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் உள்ள தனியார்  பள்ளியில் ஸ்மிதா என்பவர் கணினி  ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 12ம் வகுப்பில்  படித்து வரும் 17 வயது மாணவன் ஒருவனுடன் ஆசிரியை ஸ்மிதா பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆசிரியை மாணவனின் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸ் ஆப் சேட்டிங் செய்துள்ளார். பின்னர் செல்போனிலும் இருவரும் பேசியுள்ளனர்.

இதையடுத்து மாணவனின் பெற்றோர் எதேச்சையாக செல்போனை எடுத்து பார்த்த போது, ஆசிரியை ஸ்மிதா மாணவனுடன் ஆபாசமாக சாட்டிங் செய்தது தெரியவந்தது. மேலும் ஆசிரியை ஸ்மிதா தனது அந்தரங்க புகைப்படங்களையும் மாணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  இதனைப் பார்த்து பதறிப்போன மாணவனின் பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதனால் ஸ்மிதா பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் ஆசிரியை ஸ்மிதா தொடர்ந்து செல்போன் மூலம் மாணவனுடன் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில்  ஆசிரியை மாணவனுடன் ஊரைவிட்டு ஓடவும் முடிவு செய்துள்ளார். 

இதையறிந்த மாணவனின் பெற்றோர் 17வயதே ஆன தங்கள் மகனுக்கு 40 வயதான ஆசிரியை ஸ்மிதா செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக தலைமறைவான ஆசிரியையை போலீசார் தேடி வருகின்றனர்.