11வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை

 

11வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை

சென்னை கொரட்டூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு 11வது மாடியில் இருந்து குதித்து தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை

சென்னை கொரட்டூரை சேர்ந்த வைஜேந்தி என்ற பள்ளி மாணவி, சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இவர் இன்று மாலை கொரட்டூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு 11 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து கொரட்டூர் காவல் துறையினருக்கு புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…