கிணற்றில் மூழ்கி ப்ளஸ் 1 மாணவர் பலி!

 

கிணற்றில் மூழ்கி ப்ளஸ் 1 மாணவர் பலி!

திருச்சி

மணப்பாறை அருகே கிணற்றில் குளித்தபோது பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அடுத்த கருத்தகோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (16). இவர் புத்தாநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சண்முகவேல் நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

கிணற்றில் மூழ்கி ப்ளஸ் 1 மாணவர் பலி!

கிணற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமாகினார். இதனை கண்டு அந்த பகுதி மக்கள் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

புத்தாநத்தம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.