பிளஸ் 1 மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியீடு!

 

பிளஸ் 1 மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியீடு!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மக்கள் தேர்வெழுத முடியாதிருந்த சூழலில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் காலாண்டு அரையாண்டு தேர்வுகளின் படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதே போல 11 ஆம் வகுப்புக்கான ஒரு சில தேர்வுகள் ரத்தாகின. இதனையடுத்து மாணவர்களின் மதிப்பெண்கள் அண்மையில் வெளியான போது, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

பிளஸ் 1 மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியீடு!

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனைத்தொடர்ந்து 11, 12 ஆம் வகுப்புகளுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகின. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியாகியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், பிளஸ் 1 தேர்வில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரியவர்களின் பதிவெண் பட்டியல் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என்றும் மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.