11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து

 

11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து

தமிழ்நாட்டில் கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு ஆல் பாஸ் வழங்கப்பட்டது.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படாத நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி, பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.

11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நுழைவுத் தேர்விற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தேர்வை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.