சென்னை ஐஐடியில் அதிர்ச்சி! எரிந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உடல் மீட்பு;11 பக்க கடிதம் சிக்கியது

 

சென்னை ஐஐடியில் அதிர்ச்சி! எரிந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உடல் மீட்பு;11  பக்க கடிதம் சிக்கியது

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐஐடி கல்லூரி வளாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானி ரகுவின் மகன் உன்னி கிருஷ்ணன் நாயர்(30) உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உன்னி கிருஷ்ணன் நாயர் மரணம் தொடர்பான 11 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருக்கிறது.

சென்னை ஐஐடியில் அதிர்ச்சி! எரிந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உடல் மீட்பு;11  பக்க கடிதம் சிக்கியது

ஊரடங்கு காரணமாக ஐஐடி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஐஐடி விடுதியில் மாணவர்கள் தங்கி ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் ஒரு ஆணின் உடல் கிடப்பதை கண்டு கோட்டூர்புரம் போலீஸ் இருக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து அந்த உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் ஐஐடி விடுதியில் மேற்கொண்ட விசாரணையில், எரிந்த நிலையில் கிடந்த அந்த ஆண் சடலம் உன்னி கிருஷ்ணன் நாயர் என்பதும், அவர் இஸ்ரோ விஞ்ஞானி ரகுவின் மகன் என்பதும் தெரியவந்தது.

சென்னை ஐஐடியில் அதிர்ச்சி! எரிந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உடல் மீட்பு;11  பக்க கடிதம் சிக்கியது

கேரளாவில் பிடெக் படிப்பை முடித்த உன்னி கிருஷ்ணன் நாயர் கடந்த ஏப்ரல் மாதம் ஐஐடியில் ப்ராஜெக்ட் அசோசியேட் ஆக சேர்ந்துள்ளார். இதற்காக அவர் வேளச்சேரியில் இந்த தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்திருக்கிறார் உன்னி கிருஷ்ணன் நாயர் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அன்று அவர் கல்லூரிக்கு வந்ததை சிசிடிவி கேமரா மூலம் தெரிந்து உள்ளனர் போலீசார் ஆனால் எப்படி அவர் இறந்து கிடந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் வேளச்சேரியில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் 11 பக்கம் கொண்ட கடிதம் கிடைத்திருக்கிறது. அந்த கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக உன்னி கிருஷ்ணன் நாயர் எழுதிவைத்துள்ளார். ஆனாலும் மேற்கொண்டு அவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் அதிர்ச்சி! எரிந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உடல் மீட்பு;11  பக்க கடிதம் சிக்கியது

உண்ணி கிருஷ்ணன் நாயர் உடன் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த அனில்குமார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடம் துருவித்துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடி வளாகத்துக்குள் இஸ்ரோ விஞ்ஞானி யின் மகன் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.