இதுவரை இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா!

 

இதுவரை இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதாவது, முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கடைகள் மற்றும் மதுக் கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா!

அதன் படி, முதல்வர் அறிவித்த கட்டுப்பாடுகள் அமலிலிருந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. புதுச்சேரியில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு 1,041 ஆக இருந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து 584 பேர் குணமடைந்த நிலையில், 553 பேர் சிகிச்சையில் உள்ளனர்.