11ம் வகுப்பு மாணவியை துரத்தி துரத்தி மிரட்டி.. திருமணமான வாலிபரின் அடாவடி

 

11ம் வகுப்பு மாணவியை துரத்தி துரத்தி மிரட்டி.. திருமணமான வாலிபரின் அடாவடி

11ஆம் வகுப்பு மாணவியை துரத்தித் துரத்தி கத்தியை காட்டி மிரட்டி மிரட்டி தன்னை காதலிக்க சொல்லி அடாவடியில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு வாலிபர். இத்தனைக்கும் அவர் திருமணம் ஆனவர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தில் தான் இந்த அடாவடித் தனம் அரங்கேறியிருக்கிறது.

11ம் வகுப்பு மாணவியை துரத்தி துரத்தி மிரட்டி.. திருமணமான வாலிபரின் அடாவடி

செங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் பிரேம்குமார்( 26) காதலிப்பதாக சொல்லி சுற்றி சுற்றி வந்துள்ளார்.

‘ உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. எட்டு மாதத்திற்கு முன் தான் பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது. இப்போது என்னை காதலிக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறாயே’ என்று சிறுமி பலமுறை சொல்லியும், அவரை துரத்தி துரத்தி வந்து கத்தியைக் காட்டி மிரட்டி, ’என்னை லவ் பண்ணு. இல்லேன்னா குத்தி கொலை செஞ்சுடுவேன்’ என்று மிரட்டி வந்திருக்கிறார்.

சிறுமி தனியாக செல்லும் இடங்களிலெல்லாம் பின் தொடர்ந்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் பிரேம்குமார். தொந்தரவு தாங்காமல் பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார் சிறுமி. இதைடுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரேம்குமாரை அழைத்து கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார் பிரேம்குமார்.

இந்த நிலையில் சிறுமியின் பர்த்டே வந்திருக்கிறது. அதற்கு பிரேம்குமார் கேக் வாங்கி வந்து வெட்டி சிறுமியின் பர்த்டே கொண்டாடிவிட்டு, ஐ லவ் யூ என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

இதற்கு மேலும் விட்டுவைத்தால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த பெற்றோர்கள், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பிரேம்குமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.