கடலூர் அருகே 111 சவரன் நகை கொள்ளை!
Oct 19, 2020, 08:11 IST1603075316000
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் மணி, ராம்குமார் ஆகியோர் வீட்டுக்குள்ள இருந்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.ராம்குமார் வீட்டில் 74 சவரன் நகை, ரூ. 6 லட்சம்; மணி வீட்டில் 37 சவரன் நகை, ரூ .1.25 லட்சத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவளர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.