கண்ணாடியை உடைத்ததால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

 

கண்ணாடியை உடைத்ததால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

சென்னையில் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெத்தேல் நகரை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் தஷ்வந்த(11). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். தஷ்வந்தும் அவரது தம்பியும் வீட்டில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக பிரிட்ஜின் உள்ளே இருந்த கண்ணாடி உடைந்துள்ளது.

கண்ணாடியை உடைத்ததால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

இது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் தஷ்வந்த் வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் பேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.