“சீரியல் பாக்கவச்சி சீரழிச்சிட்டானே..” -பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“சீரியல் பாக்கவச்சி சீரழிச்சிட்டானே..” -பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போன சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

“சீரியல் பாக்கவச்சி சீரழிச்சிட்டானே..” -பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

உத்திரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தின் கிஷ்னி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 11 வயதான சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சிறுமியின் வீட்டில் டிவி இல்லை .அதனால் அந்த சிறுமி அடிக்கடி அவரின் பக்கத்து வீட்டில் டிவி சீரியல் பார்க்க செல்வார் .அப்போதெல்லாம் அந்த வாலிபர் அந்த சிறுமியிடம் ஆசையாக பேசி வந்துள்ளார் .

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல அந்த சிறுமி அவரின் பக்கத்து வீட்டில் டிவி பார்க்க சென்றார் .அப்போது அந்த சிறுமிக்கு விருப்பமான சீரியல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது .அப்போது  அந்த வாலிபரின் வீட்டில் யாருமில்லாததால் அந்த சிறுமியை பாலியல்  பலாத்காரம் செய்து விட்டார் .பிறகு இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .

ஆனால் அதன் பிறகு வீட்டிற்கு வந்த அந்த சிறுமி இந்த விஷயத்தை  தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை வலை வேசி தேடி வருகின்றனர் .பிறகு அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .