11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 2 இளைஞர்கள் போக்சோவில் கைது!

 

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 2 இளைஞர்கள் போக்சோவில் கைது!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பனைக்குளம் பகுதியை சேர்ந்தவர் 11 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமாகினார். இதனால் அவரது பெற்றோர் சிறுவனை தேடியபோது, அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகமது பிலால் (24) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறுவனை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 2 இளைஞர்கள் போக்சோவில் கைது!

இதனை அடுத்து, சிறுவனின் பெற்றோர் முகமது பிலாலை பிடித்து விசாரித்தபோது, சிறுவன் வீட்டிற்கு வந்துள்ளான். தொடர்ந்து அவனிடம் விசாரித்தபோது, தன்னை முகமது பிலால், அவரது நண்பரான சேகு ஆகியோர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் தெரிவித்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் முகமது பிலால், சேகு ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று இருவரையும் கைது செய்தனர்.