‘லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து’- கண்ணிமைக்கும் நொடியில் 11 பேருக்கு நேர்ந்த கதி!
குஜராத் மாநிலம், வதோதரா அருகே லாரிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வதோதரா அருகே உள்ள வகோதியா நெடுஞ்சாலை பகுதியில், பவகத்திலிருந்து சூரத்தை நோக்கி ஒரு குழு லாரியில் சென்று கொண்டிருந்ததுள்ளது. சரியாக இன்று அதிகாலை 3 மணி அளவில், இந்த லாரியும் எதிரே வந்த மற்றொரு லாரியும் மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் படுகாயங்களுடன் எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், லாரி விபத்து தொடர்பாக விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் விஜய் ரூபானி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் இரங்கல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு அரசு உதவி வழங்கி வருவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.