எய்ம்ஸ் சுகாதார பணியாளர்கள் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

 

எய்ம்ஸ் சுகாதார பணியாளர்கள் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

டெல்லி: எய்ம்ஸ் சுகாதார பணியாளர்கள் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் உட்பட 11 சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 206-ஆக அதிகரித்துள்ளது.

எய்ம்ஸ் சுகாதார பணியாளர்கள் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பத்து மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 9 தொழில்நுட்ப வல்லுநர்கள், 5 மெஸ் தொழிலாளர்கள், 49 மருத்துவமனை உதவியாளர்கள், 34 துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் 69 பாதுகாப்புக் காவலர்கள் உட்பட 206 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 150-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் குணமடைந்து மீண்டும் பணியாற்ற மருத்துவமனைக்கு வந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் டி.கே.ஷர்மா தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 64-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.