கைது செய்யப்பட்ட சிலிண்டர் திருடனுக்கு கொரோனா – அசாமில் 11 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்

 

கைது செய்யப்பட்ட சிலிண்டர் திருடனுக்கு கொரோனா – அசாமில் 11 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்

கவுகாத்தி: எரிவாயு சிலிண்டர்களை திருடியதற்காக கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 11 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கவுகாத்தி நகரின் ஹடிகான் வட்டாரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை திருடியதாக 21 வயது இளைஞன் கடந்த ஜூன் 9 அன்று கைது செய்யப்பட்டான். அடுத்த நாள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனை நீதிபதி ரிமாண்டிற்கு அனுப்பினார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞனுக்கு சிறைச்சாலை நெறிமுறைகளின்படி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  மேலும் அந்த இளைஞனை சமீபத்தில் தேஜ்பூர் சிறைக்கு மாற்றினர். இந்நிலையில் அந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது ஜூன் 1 அன்று பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சிலிண்டர் திருடனுக்கு கொரோனா – அசாமில் 11 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்

இதைத் தொடர்ந்து அவனுடன் தொடர்பில் இருந்த ஹடிகான் காவல் நிலையத்தின் 11 போலீசாரிடம் இருந்து கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் இதுவரை 4000-க்கும் அதிகமானோரை கொரோனா பாதித்துள்ளது. வடகிழக்கு இந்தியாவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று அசாம் ஆகும். இந்த நோய் காரணமாக அந்த மாநிலத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.