திருப்பத்தூர்- டார்லிங் ஷோரூம் கொள்ளை சம்பவத்தில் 11 பேர் கைது

 

திருப்பத்தூர்-  டார்லிங் ஷோரூம் கொள்ளை சம்பவத்தில் 11  பேர் கைது

திருப்பத்தூர் டார்லிங் ஷோரூமில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் 11 பேரும் பிடிபட்டனர். அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர்-  டார்லிங் ஷோரூம் கொள்ளை சம்பவத்தில் 11  பேர் கைது

திருப்பத்தூரில் தூயநெஞ்சக் கல்லூரி வணிக வளாகத்தில், டார்லிங் டிவி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4ம்தேதி கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் டிவி உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

திருப்பத்தூர்-  டார்லிங் ஷோரூம் கொள்ளை சம்பவத்தில் 11  பேர் கைது

கடையில், லேப்டாப், விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவையும் உடைத்து எடுத்து சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருப்பத்தூர்-  டார்லிங் ஷோரூம் கொள்ளை சம்பவத்தில் 11  பேர் கைது

இந்நிலையில், டார்லிங் டிவி ஷோரூமில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை, மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் திருப்பத்தூர் நகர காவல் அதிகாரிகள் விரைந்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பணம், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர்-  டார்லிங் ஷோரூம் கொள்ளை சம்பவத்தில் 11  பேர் கைது


மேலும், கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– பழனி