பேய் அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவி

 

பேய் அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவி

மதுரை பள்ளிக்கூட பகுதி பாண்டிய வெள்ளாளர் தெருவை சேர்ந்த கோபியின் மகள் ரஞ்சினி. இவர் அப்பகுதியில் இருக்கும் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ரஞ்சினி கடந்த இரண்டு மாதங்களாக தங்களது இல்லத்தில் பேய் இருப்பதாக கூறிகொண்டே அச்சத்தில் இருந்துள்ளார்.

பேய் அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவி

பேய் மீது உள்ள பயத்தினால் கடந்த 14 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். ரஞ்சனியை சிகிச்சைக்காக  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.