’12ம் வகுப்பு மாணவன் கடத்தல்’ வீடியோவால் சிக்கிக் கொண்ட 10ம் வகுப்பு மாணவர்கள்!

 

’12ம் வகுப்பு மாணவன் கடத்தல்’ வீடியோவால் சிக்கிக் கொண்ட 10ம் வகுப்பு மாணவர்கள்!

உ.பியில் 12ம் வகுப்பு மாணவன், 10ம் வகுப்பு மாணவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வரும் 12ம் வகுப்பு மாணவன் கடந்த 28ம் தேதி தனது நண்பர்களுடன் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சந்திக்க காரில் சென்றிருக்கிறார். அவர் சிறுமியுடன் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த 10ம் வகுப்பு மாணவர்கள் அவரை, அதே காரிலேயே கோவிந்தபுரம் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கட்டிப் போட்டு அடித்துள்ளனர்.

’12ம் வகுப்பு மாணவன் கடத்தல்’ வீடியோவால் சிக்கிக் கொண்ட 10ம் வகுப்பு மாணவர்கள்!

அதுமட்டுமில்லாமல், மாணவனின் உடையை கழற்றச் சொல்லி பெல்ட் மற்றும் குச்சியால் பலமாக தாக்கியுள்ளனர். மேலும், மாணவனின் வாயை துணியை வைத்து அடைத்த சிறுவர்கள் அவரது செல்போனில் இருந்து எல்லா சமூக ஊடக கணக்குகளையும் முடக்கியதோடு அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இவை அனைத்தையும் தாக்கப்பட்ட மாணவன் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக சந்தேகித்த போலீசார், மாணவியுடன் அந்த மாணவன் பேசியதற்காக அவர் தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த 4 சிறுவர்களையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.