இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

 

இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் அளித்த கைப்பேசி எண்ணுக்கும் குறுந்தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

மேலும் மாணவர்களின் கல்வியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மதிப்பெண்களில் குறை இருந்தால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வரும் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட போதே மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.