10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

 

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அஜித்குமார்(15) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அஜித்குமார், மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் ஒட்டுநர் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.