10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது!

 

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது!

கோவை

கோவை காரமடையில் 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிக்கரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமி, அதே பகுதியை சேர்ந்த உறவினரான கட்டிட தொழிலாளி விக்ரம்(20) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் சிறுமியை காதலிப்பதாக விக்ரம் தெரிவித்து உள்ளார்.

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது!

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாணவி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த விக்ரம் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், தனக்கு நிகழ்ந்த கொடுமையை தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விக்ரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.