முதல்வரிடம் ரூ.10 கோடி நிதி வழங்கிய கலாநிதி மாறன்

 

முதல்வரிடம் ரூ.10 கோடி நிதி வழங்கிய கலாநிதி மாறன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 கோடிக்கான காசோலையை தந்தார். காவேரி கலாநிதிமாறன் மற்றும் துர்க்கா ஸ்டாலின் உடன் இருந்தனர்.

முதல்வரிடம் ரூ.10 கோடி நிதி வழங்கிய கலாநிதி மாறன்

கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதால் தொழிலதிபர்களூம் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், சன் குழுமத்தின் சார்பாக நிதியளிக்க, கலாநிதிமாறன் தனது மனைவி காவேரியுடன் முதல்வர் இல்லம் சென்றார். முதல்வரிடம் 10 கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்தபோது காவேரி மாறனுடன், முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார்.