கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மரணம்

 

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மரணம்

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மரணம்

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் தாராபூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

7 ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு குழந்தை என்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சூரத்திலிருந்து பாவ்நகருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். நெடுஞ்சாலையில் இந்திரனாஜ் கிராமத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேரின் உடல்கள் தாராபூர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, விபத்து குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்துவிட்டு, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு உதவி அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.