சசிகலாவுக்கு 10 மெய்க்காப்பாளர்கள்! ஜெ., வுக்கு பாதுகாப்பு வழங்கிய குழு!

 

சசிகலாவுக்கு 10 மெய்க்காப்பாளர்கள்! ஜெ., வுக்கு பாதுகாப்பு வழங்கிய குழு!

ஜனவரி 27ம் தேதியோடு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் சசிகலாவை விடுதலை செய்துவிட்டது. விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருப்பதால் அவர் சென்னை திரும்ப முடியாத நிலை இருக்கிறது.

சசிகலாவுக்கு 10 மெய்க்காப்பாளர்கள்! ஜெ., வுக்கு பாதுகாப்பு வழங்கிய குழு!

ஆனால், சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி தமிழகம் திரும்பவிருக்கிறார்.

சசிகலாவை விடுதலை செய்யும்வரை சிறை நிர்வாகம் அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தது. அதன்பின்னர் சசிகலாவுகு பாதுகாப்புவேண்டுமென்று பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்ததால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பு போதாது என்று, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த கார்டன்சிவா தலைமையில்10 மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.