கொரோனாவுக்கு ஒரே நாளில் 101 பேர் உயிரிழப்பு!

 

கொரோனாவுக்கு ஒரே நாளில் 101 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 94,22,228 பேருக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் மாஸ்க் அணிந்து உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 101 பேர் உயிரிழப்பு!

ஏனெனில், கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டால் தான் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸை எதிர்த்து போராடும் திறன் கிடைக்குமென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,09,50,201 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 101 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,56,014 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,37,342 பேருக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.